பவானி சிங் நியமண வழக்கில், மூவர் அமர்வின் தீர்ப்புரையை படித்துப் பார்த்ததில், என்ன காரணத்திற்காக குற்றத்தண்டனைக்கு ஆளானவர்களால், மேல்முறையீடு செய்யப்பட்டதோ, அதற்கான சட்டப்பூர்வமான வாய்ப்பை வழங்காமல், அதாவது பவானி சிங்கின் வாதத்தை ஏற்கக்கூடாது என்றும், அன்பழகன் மற்றும் கர்நாடக அரசின் வாதங்கள் தீர்ப்பில், வெளிப்பட வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியுள்ள நிலையில், குற்றத்தண்டனைக்கு ஆளானவர்களின் வாதத்தையும் உ(ய)ரிய முறையில் பரிசீலனைச் செய்ய வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மட்டுமே தந்திருக்க வேண்டும்.

மாறாக, குற்றத்தண்டனைக்கு ஆளானவர்களின் வாதங்குறித்து எதையுமே சொல்லாதது, ஏதோ வெறுப்பில் எழுதப்பட்ட தீர்ப்பிது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேல்நிலை நிதிபதிகள், கீழ்நிலை நிதிபதிகளுக்கு, சட்ட வழிகாட்டு உத்தரவைச் சட்டப்படியே பிறப்பிக்க முடியும் என்றாலும், அதற்கென்று சில வரையறைகள் உள்ளன.

ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில், வழக்கு தரப்பினர்கள் யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ, குறிப்பிட்டதொரு சட்டப்பிரச்சினையை எழுப்பி, அதுகுறித்து முடிவெடுக்க கோரும்போது, தான் அல்லது தாங்கள் சொல்லும் இந்தக்கருத்து சட்டப்படி ஏற்றக்கத்தக்கதுதானே என்கிற சந்தேகம் தங்களுக்கு எழும்போது, அதுகுறித்து தங்களது மேல்நிதிபதிக்கு அனுப்பி கருத்துக்கேட்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும். இதன் பேரில், அந்நிதிபதி மேல்நிலை நிதிபதிக்கு அனுப்பி, தனக்கு வழிகாட்டுமாறு கோரவேண்டும்.

இதனை நிதிபதி வழக்கு தரப்பினர்களின் வலியுறுத்தல் இல்லாமல், என்ன முடிவெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியாத அறிவுவறுமையில் இருக்கும் நிதிபதிகள் சுயமாகவும் கேட்கச் செய்யலாம். ஆனால், இந்தியாவில், அறிவுவறுமையில் உள்ள எந்த நிதிபதியும் கேட்டதாக சரித்திரமில்லை.

இதற்கு காரணம் என்னவென்று யோசித்தால், நம்மைப் போன்றுதானே அவரும் அறிவுவறுமையில் இருக்கிறார். நாம் எதற்கு அவரிடம் கேட்க வேண்டும் என்கிற எண்ணமாகவே இருக்கிறது. உண்மையில், இந்தியாவில் உள்ள அத்தனை நிதிபதிகளுமே, அறிவுவறுமையில்தான் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது அவர்களின் தீர்ப்புரைகள் வாயிலாக வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவுவறுமைக்கும் ஓர் அளவு வேண்டாமா?

ஆனால், இவர்களின் அறிவுவறுமை எவ்வளவு என்பதற்கு ஓர் அளவேயில்லை என்பதுதான் நமது சட்ட ஆராய்ச்சியின் சாதனை. பவானி சிங் நியமணம் செல்லாது என்கிற வழக்கும் இதற்கு நல்லதொரு உண்மை.

சரி, நம்ம இடையில் விட்டுவிட்ட முக்கியமான சட்டப்பிரச்சினைக்கு வருவோம்.

அப்படியொரு நிதிபதி குறிப்பிட்டு அனுப்பும் சட்டப்பிரச்சினைகள் குறித்து, வழிகாட்டும் விளக்கத்தைதான் மேல்நிலை நிதிபதிகள் வழங்க முடியுமேயன்றி, தன்னிடம் நேரடியாக வந்ததொரு வழக்கில், தன் இஷ்டம்போல் வழிகாட்டும் உத்தரவென்கிற பெயரில், விசாரணை நிதிபதியின் விசாரணையில் குறுக்கிட இயலாது.

ஆனால், மூன்று நிதிபதிகள் கொண்ட அறிவுவறுமை குழு, தான்தோண்றித்தனமாக தங்களது இஷ்டம்போல, தீர்ப்பை எழுதியுள்ளனர். ஆகையால்தான், தீர்ப்புரையில் இந்தெந்த சட்ட விதிப்படி, இதையிதை செய்யவேண்டும் எனச் குறிப்பிட்டுச் சொல்லாமல், பொத்தாம் பொதுவாக எழுதியுள்ளனர்.

இதெல்லாம் அரசியல் சாசன அமர்வின் அவலநிலையென்றால், மற்ற நிதிபதிகள் குறித்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

இதையெல்லாம், நிதிபதி குமாரசாமி சட்டப்படி ஏற்க வேண்டுமென்கிற அவசியமில்லை என்றாலுங்கூட, அவரது அறிவுவறுமையை வைத்துதானே அவர் முடிவெடுக்க முடியும் என்பதைத்தவிர, வேறென்ன சொல்லமுடியும்.

சரி, என் பார்வையில் இதற்கென்ன தீர்வு….

குற்றத்தண்டனைக்கு ஆளானவர்கள் தீர்ப்பில் உள்ள இக்குறைபாட்டினை, இந்திய சாசனம் வழங்கியுள்ள அடிப்படையுரிமை சட்டப்பிரச்சினையாக எழுப்பி, அவர்களது தரப்பு வாதுரையைச் சமர்ப்பித்து, இவ்வாதுரை சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பதை தீர்ப்பு வழங்கிய உச்சநிதிபதிகளுக்கே அனுப்பி கேட்டுக்கொள்ள, மேல்முறையீட்டை விசாரணை செய்யும் நிதிபதியைக் கோர சட்டப்படியான எல்லா உரிமைகளும் உண்டு.

ஆனால், மடியில் கணமில்லை என்றால், வழியில் பயமில்லை என்பதுபோல, தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை உணருபவர்களால்தான், இதுபோன்ற சட்டப்பிரச்சினைகளையெல்லாம் எழுப்பயியலும்.

ஊடக விவாதங்களில் பங்குபெறுவோர், நிதிபதிகளின் தீர்ப்பை எப்பொழுதும் விமர்சிக்கமாட்டார்கள். ஆனால், தற்போது அச்சூழ்நிலை மாறி விமர்சிக்க ஆரம்பித்திருப்பது, ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமேயாகும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book