மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி சொல்லியுள்ள விசயத்தில், ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு மருத்துவத்தை மிகச்சரியானபடி உபயோகித்துக் கொண்டனர் எனக் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மை.

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று நெடுங்காலமாகி விட்டப்பின்னுங்கூட, அவர்களது பழக்க வழக்கங்களை அப்படியேப் பின்பற்றுவதால் அனைத்து விதத்திலும் அடிமைகளாய் இருக்கிறோம்.

இயற்கையின் அற்புதப்படைப்புளான உடல் உறுப்புகள் எல்லாம் அறிவு வறுமை ஆங்கில மருத்துவர்களால், அறுவை சிகிச்சை என்கிற பெயரில் வெட்டியெறிந்து, உயிருடன் உள்ளபோதே பாதி பிரேத பரிசோதனை முடித்து விடுகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்துள்ள, சதுரங்க வேட்டை என்கிற திரைப்படத்தில் கூட, ‘ஏழைகளின் உடலை வைத்து மருத்துவத்தைக் கற்றுக்கொள்; அதனை பணக்காரனுக்கு பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக்கொள்’ என்று மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை வெட்ட வெளிச்சமாகவே சொல்கிறார்கள்.

ஒருபக்கம் உரிமைக்காக போராடவேண்டிய நிலையென்றால், மறுபக்கமோ உடல் ஆரோக்கியத்திற்காகவும், உயிருக்காகவும் போராடிக் கொண்டே இருக்கிறோம் என்பதால், இவற்றைக் குறித்தும் விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவேதான், இதனை அப்படியே பதிவிடுகிறேன்.

சில தினங்களுக்கு முன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செல்லநேர்ந்த போது, உண்மையில் நாட்டில் இவ்வளவு புற்றுநோயாளிகள் இருக்கிறார்களா என எண்ணத்தோன்றியது. பாரம்பரிய வைத்திய முறையை பரப்புவோர், முகாமிட வேண்டிய இடம், இதுபோன்ற நோய் உற்பத்தி மருத்துவனைகளேயன்றி வேறில்லை.

Page 1Page 2Page 3Page 4

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book