நாங்கள் அனைவருமே, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வேலை தேடி ஓசூர் வந்து, இங்கு அமைந்துள்ள பல தனியார் நிறுவனங்களில், தொழிலாளிகளாக இன்றும் வேலை பார்த்து வரும் சாதாரண தொழிலாளிகள்தான்.

வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்த நன்றாக சம்பாதிக்கும் நாங்கள், நம்மால் முடிந்த ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து ஓசூர் (சிப்காட்-2) நுகர்வோர் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சங்கத்தை 15-08-1998 இல் அமைத்து உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுகர்வோர் தொடர்பான களப்பணிகளை மட்டுமே ஆற்றி வந்தோம்.

2001 ஆம் ஆண்டில்தாம், எதிர்பாராத விதமாக, 2000 ஆம் ஆண்டில் தனது சட்ட ஆராய்ச்சியை தொடங்கி 2010 இல் ஆராய்ச்சியை முடிக்கும் நோக்கோடு, சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த நீதியைத்தேடி… என்ற சட்ட விழிப்பறிவுணர்வு மாத இதழின் இணை ஆசிரியரும், சட்ட ஆராய்ச்சியாளரும் ஆன திரு. வாரண்ட் பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர் மூலம் திரு.செந்தமிழ்க்கிழார் என்பவரின் அறிமுகமும் எங்களுக்கு கிடைத்தது.

அதுவரை நுகர்வோர் விழிப்புணர்வே பிரதானம் என்ற நிலையில் இருந்த நாங்கள், ‘‘ஒட்டு மொத்த சட்ட விழிப்பறிவுணர்வே பிரதானம் என்ற தெள்ளத் தெளிவான நிலைக்கு வந்தோம்’’.

இதன் அடிப்படையில் சங்கத்தின் பெயரை Consumer Awareness and Rural Education Society என்று 2005 ஆம் ஆண்டில் மாற்றி அமைத்தோம். இதன் சுருக்கம்தான் கேர் சொசைட்டி – CARE Society ஆகும். இதன் பிறகே இத்தளத்தை உருவாக்கி, திரு.செந்தமிழ்க்கிழாரை திறக்க வைத்தோம்.

ஆனால், 2006 ஆம் ஆண்டில், திரு.செந்தமிழ்க்கிழார், சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, நான் சொல்வதே சட்டம் என்றும், தானே அனைவருக்குமான சட்டத்தை இயற்றியும், தன்னைத்தானே இந்தியாவின் தலைமை நீதிபதி என்றும், குடியரசுத் தலைவர் என்றும் தான்தோண்றித் தனமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் அறிவித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.

போலி நீதிபதியாக கைது செய்யப்பட்ட செந்தமிழ்க்கிழார் மற்றும் அவரது வாசகர் லூர்துசாமி
இதன் விளைவாக 2010 ஆம் ஆண்டில், சென்னையில் போலி நீதிபதி கைது என்று அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம் பிடித்தார். பொய்யான அமைப்புக்களின் பெயரில் கட்டப்பஞ்சாயத்து

கூடவே, சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாது, நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆசைப்பட்ட வாசகர்கள் சிலரையும் சிக்க வைத்தார். காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதியாக நடித்த ‘‘டுபாக்கூர்’’ நபர் கைது.

போலி நீதிபதியாக வழக்கில் சிக்கி வாழ்க்கையை இழந்துள்ள செந்தமிழ்க்கிழாரின் சிஷ்யர் ஆறுமுகம்
முன்பாக, சட்டத்தில் மிகுந்த தெளிவுடைய திரு.வாரண்ட் பாலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட, திரு.செந்தமிழ்க்கிழார் தன்னைத் திருத்திக் கொண்டு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் முன் வராத காரணத்தால், வேறு வழியின்றி திரு.வாரண்ட் பாலா அவர்களுடன் மட்டும் இணைந்து நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம். சட்ட விழிப்புணர்வுக்கு மத்திய சட்ட அமைச்சகம் நிதி ஒதுக்குவது குறித்து அறிந்து அதற்கு விண்ணப்பித்ததில், நீதியைத்தேடி… இதழை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கு வழங்க, முதல் முறையாக 2006 இல் ரூ-15,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு மாத இதழை நூலகங்களுக்கு கொடுப்பதால், எவ்வித சட்ட விழிப்பறிவுணர்வும் சமுதாயத்தில் ஏற்பட்டு விடாது என்று தீர்க்கமாக நம்பிய திரு.வாரண்ட் பாலா, தனது பத்து வருட ஆராய்ச்சி திட்டப்படி நீதியைத்தேடி… இதழ்களின் தொகுப்பாக, அதே நீதியைத்தேடி… தலைப்பில், நூலாக வழங்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

மேலும், அதற்கு தேவைப்படும் கூடுதலான தொகை சுமார் 50,000 ஐ தானே, பிச்சை எடுத்தாவது செய்து விட வேண்டும் என்றும் முடிவு செய்து, அதற்கான களப்பணியில் இறங்கினார். நல்ல வேளையாக மக்கள் இவரை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லவில்லை.

இவரது வழிகாட்டுதலில் தனக்குத்தானே வாதாடி தனது நியாயத்தை தக்க வைத்துக் கொண்டவர்களை, இவரே நேரடியாக அனுகி நன்கொடை கோரிய போது, ஒரு சிலரைத் தவிர பலரும் தந்ததால், அவரது அதிரடித் சட்ட விழிப்பறிவுணர்வுத் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமாகி, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே வேகத்தில் முடிந்தது.

நன்கொடை தந்தவர்களில், வாசகர்கள் மட்டுமல்லாது காவலர்கள், வக்கீல்கள், நீதிபதிகளும் உண்டு என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! எனவே, நமது இச்சட்ட விழிப்பறிவுணர்வுத் திட்டம், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதே இயற்கையின் திட்டம் போலும்!

இப்படி, இந்தியாவில் இதுவரை யாருமே செய்திராத வகையிலான, எங்களின் (நமது) சிறப்பான சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமையால், சட்ட மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவி 2007 இல் ரூ-30,000 ஆகவும், 2008 இல் ரூ-40,000 ஆகவும், 2009 இல் ரூ-30,000 ஆகவும், 2010 இல் ரூ-60,000 ஆகவும் கூடியது. திரு.வாரண்ட் பாலா அவர்களும் சுமார் இரண்டு, மூன்று மடங்கு பணத்தை நன்கொடையாக வசூல் செய்து, தான் திட்டமிட்டிருந்த ஐந்து நூல்களையும் எழுதி சமுதாயத்திற்கு பொதுவுடைமையாக அர்ப்பணித்துள்ளார் என்பதையும் பெருமையுடனும், பணிவுடனும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

திரு.வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள ஐந்து நூல்களும் எங்களால் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4000 பொது நூலகங்கள், 1500 காவல் நிலையங்கள், 120 சிறைச்சாலைகள் மற்றும் 700 நீதிமன்றங்கள் என அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

உங்களின் அவசிய மற்றும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இவ்வைந்து நூல்களையும் உரிய நன்கொடை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

எங்களின் இந்த சட்ட விழிப்பறிவுணர்வு சேவையில் நீங்களும் உங்கள் கடமையை ஆற்றிட அன்போடு அழைக்கின்றோம்.

எங்களின் முகவரி; கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா-635109.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book